பகீர்!! முதல்வர் மீது வெடிகுண்டு வீசப்படும்!! மர்ம நபர் வாட்ஸ் அப்பில் மிரட்டல்.!
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்படும் என்று வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்துள்ள செய்தி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான யோகி ஆதித்யநாத் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட யோகி ஆதித்யநாத் 2வது முறையாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் இந்து அரசியலை இவர் முன்னெடுப்பதாக பலர் குற்றம் சாட்டி வந்தாலும் அந்த மாநில மக்கள் இவரை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2ம் தேதி காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்துள்ளது. அதில், இன்னும் 3 நாட்களில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் வந்துள்ளது. இந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். முதல்வருக்கான பாதுகாப்பை பெரிய அளவில் பலப்படுத்தியுள்ளனர். மேலும், இது குறித்து சுஷாந்த் கோல்ப் சிட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை அடையாளம் காணும் பணி முடுக்கவிடப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. மிரட்டல் விடுக்கப்பட்டு ஒரு வார காலமாகியும் மர்ம நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் முதலமைச்சரின் அனைத்து பணிகளிலும் காவல்துரை கவணமுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மர்ம நபர் குறித்து போலீசாரின் விசாரணையும் தீவிரமடைந்துள்ளது.