விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!! விமானநிலையத்தில் பரபரப்பு!! பயணிகள் கடும் அவதி!!
காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போன் செய்த மர்ம நபரை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு செல்ல தயாரானது. விமானத்தில் மொத்தம் 174 பயணிகள் இருந்தனர். அப்போது சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்ம நபர், துபாய் செல்ல தயாராக இருக்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், வெடி குண்டுகளுடன் ஒரு பயணி இருப்பதாக சொல்லிவிட்டு உடனடியாக இணைப்பை துண்டித்தார்.இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறை போலீசார் உடனடியாக விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் விமான நிலையை வெடிகுண்டு நிபுணர்கள் சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் விமானத்தில் முழு சோதனை செய்தனர். அதன் முடிவில் எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை.
கட்டுப்பாட்டு அறைக்கு பொய்யான தொலைபேசி அழைப்பை மேற்கொண்டது யார் என்பதை அறிய அழைப்பு விடுத்த நபரின் தொலைபேசி எண்ணை டிராக் செய்தனர். அதன்படி சென்னை மணலியை சேர்ந்த ஒருவர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த மர்ம ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபரின் தங்கையும், தங்கை கணவரும் குறிப்பிட்ட விமானத்தில் துபாய் செல்ல இருந்தனர். இதற்கிடையில் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் அவர்களின் பயணம் தடைப்பட்டதாகவும், அதன் காரணமாகவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தாகவும் தெரிவித்தார்.துபாய் செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இருந்ததால் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!