பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!! வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள்!!

 
வெடிகுண்டு மிரட்டல்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்சட்டியில் உள்ள வேலம்மாள் பள்ளி வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, வேலம்மாள் போதி கேம்பஸ், வேலம்மாள் வித்யாலயா, வேலம்மாள் இன்டர்நேஷனல் என நான்கு பள்ளிகள் இயங்கி வருகிறது.

இந்த பள்ளிகளில் சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பள்ளி விடுதியில் தங்கியும், தினமும் வீட்டுக்கு சென்று வரும் மாணவர்களும் உள்ளனர். இன்று வழக்கம்போல் பள்ளி செயல்பட தொடங்கிய நிலையில், பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்துள்ளது.

திருவள்ளூர்

இதனைத் தொடர்ந்து, உடனடியாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர். மாணவர்களை வந்து அழைத்து செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். மேலும், தனியார் மற்றும் பள்ளி வாகனங்களை உடனடியாக வரவழைக்கப்பட்டு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களை வீட்டுக்கு அனுப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி தலைமையில் போலீசார் விரைந்து வந்துள்ளனர். தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த்தியுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்

திருவள்ளூர்,பொன்னேரி அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடி குண்டு மிரட்டலால் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web