Breaking! தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் தூக்கிட்டு தற்கொலை!
தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரசாத் சேர்லிங்கம்பள்ளி தலைவராகவும், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தவர் ஞானேந்திர பிரசாத். இவர் கடந்த சில நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து தனது பென்ட்ஹவுஸில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஞானேந்திர பிரசாத்தை நேற்று மாலை நேற்று அவரது வீட்டில் போலீசார் சடலமாக மீட்டனர்.
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஞானேந்திர பிரசாத் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக (பிஎம்இ) உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?