முக்கிய அறிவிப்பு!! அனைத்து சனிக்கிழமைகளிலும் இனி வேலை நாள்!! ​​​​​​​

 
சனிக்கிழமைகளில் இனி வேலை நாள்

மாண்டஸ் புயல் மற்றும் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்தது.

மாணவர்கள்

அக்டோபர் முதல் வாரத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு ஓரளவு மலைப்பொழிவு குறைந்த நிலையில் அடுத்தடுத்து புயல்கள் உருவானதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது.

மாணவர்கள்

அவ்வகையில் இந்த வருடம் புயல் மற்றும் கனமழை காரணமாக அதிகளவில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கிட்டத்தட்ட 20 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களாக விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனை ஈடு செய்ய இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

From around the web