அண்ணனின் இறுதி சடங்கில் பாம்பு கடித்து தம்பியும் உயிரிழப்பு!! உறைய வைத்த சோகம்!!

 
பாம்பு

பாம்பு கடித்து இறந்த சகோதரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட தம்பியை அதே பாம்பு மீண்டும் கடித்த சம்பவம் லக்னோவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பழி வாங்கும் நோக்கத்தில் ஒரே பாம்பு சகோதரர்களை கொன்று இருக்குமோ என்று கிராம மக்கள் பேசி வருவதால் அச்சம் நிலவுகிறது.

உத்தரபிரதேசத்தில் உள்ள பவானிபூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அரவிந்த் மிசாரா. இவர் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாம்பு கடிதத்தில் பரிதாபமாக பலியானார். இதைக் கேள்விப்பட்டு இறுதிச்சடங்கில் பங்கேற்க இவரது தம்பி கோவிந்த் மிசாரா(22 வயது) கடந்த புதன்கிழமை பவானிபூர் கிராமத்திற்கு வந்திருந்தார்.

பாம்பு

இறுதிச்சடங்கில் பங்கேற்று விட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கோவிந்த் மிசாராவையும் பாம்பு தீண்டியது. இதனால் அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

தொடர்ந்து பாம்பு தீண்டி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலியானதால் மருத்துவ மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் உள்ளூர் எம்.எல்.ஏ.வும் சகோதரர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

உடல்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் ஒரே பாம்பு கடித்து அடுத்தடுத்த நாளில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா பாணியில் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் அண்ணன், தம்பி 2 பேரையும் பாம்பு தீண்டி இருக்குமோ என்று ஊர் மக்கள் பேசி வருவதும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web