பேருந்து பயணிகளே உஷார்!! கூச்சலிடுதல், கண் அடித்தல், விசிலடிக்க தடை!!

 
பேருந்து

பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு சமீபகாலமாக தொல்லைகள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இது குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு மோட்டார் சட்ட வாகனங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பேருந்து

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்கக் கூடாது. கூச்சலிடக் கூடாது. விசிலடிக்க கூடாது. பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை வாகனத்தில் இருந்து இறக்கிவிடலாம்.

பேருந்து போன்

நடத்துனர் எச்சரிக்கையை மீறும் ஆண் பயணியை வழியில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம். ஆண் பயணிகள் கூச்சலிடுதல், கண் அடித்தல், விசில் அடித்தல், சைகை கொடுத்தல் இவைகளை செய்யக் கூடாது  என நடத்துனர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள்  வழங்கப்பட்டுள்ளது. தமிழக மோட்டார் வாகன விதிகளிலும் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web