14 வது மாடியிலிருந்து தொழிலதிபர் குதித்து தற்கொலை!! சென்னையில் பரபரப்பு!!

 
14

 

ரியல் எஸ்டேட் அதிபர் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டெல்லியில் காவல் ஆணையராக பணியாற்றி வருபவர் சஞ்சய் அரோரா.  இவர் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாகவும் இருந்து வருகிறார். இவருக்கு சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் தயிஷா குடியிருப்பில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை சஞ்சய் அரோரா வாடகைக்கு விட்டுள்ளார்.

குதித்து தற்கொலை
இதில் கடந்த 4 வருடங்களாக மதுசூதன ரெட்டி என்பவர் தனது குடும்பத்துடன் வாடகைக்கு இருந்து வந்தார். இவர் தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து செய்து வந்தார்.இந்நிலையில் நேற்று மதுசூதன ரெட்டி தான் வசித்து வரும் குடியிருப்பின் 14வது மாடி பால்கனியில் இருந்து திடீரென்று கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த மதுசூதன ரெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குடியிருப்பில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

தாய் மற்றும் 2 குழந்தைகள் தற்கொலை

ரியல் எஸ்டேட் அதிபர் மதுசூதன ரெட்டி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? இது தற்கொலைதானா? தொழில் பிரச்சினையா? கடன் பிரச்சினையா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.14வது மாடியில் இருந்து தொழிலதிபர் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை விருகம்பாக்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வைரல் வீடியோ!! வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வைரல் வீடியோ!! இனி கார் சாவிய தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web