விமான நிலையத்தில் பரபரப்பு!! வியாபாரி மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணம்!!

 
விமான நிலையம்

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானம் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் வந்திறங்கியது. இதில் கொழும்பு நகரைச் சேர்ந்த முகமது பாரூக் என்ற வியாபாரி வந்தார். இவருக்கு வயது 57.

விமானநிலையம்

சென்னை விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்து கொண்டு முகமது பாரூக் வெளியே வந்தார். விமான நிலைய வளாகத்தை வந்தடைந்த அவர், திடீரென்று மயங்கி கீழே சரிந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் மற்றும் அங்கிருந்தவர்கள் விமான மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.


விரைந்து சென்ற மருத்துவ குழுவினர் முகமது பாரூக்கை பரிசோதனை செய்தவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினார்கள். மேலும் அவர் திடீர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.

விமானநிலையம்
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், முகமது பாரூக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இலங்கையில் உள்ள முகமது பாருக் குடும்பத்தினருக்கும் அவரின் மரண செய்தி குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.விமான நிலையத்தில் இலங்கை வியாபாரி மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்து பலியான சம்பவம் விமானநிலையத்தை கதிகலங்க வைத்துவிட்டது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web