வாழைத் தோட்டத்திற்குள் செழிப்பாக வளர்ந்த கஞ்சா செடிகள்! வேலூரில் பரபரப்பு!

 
கஞ்சா முனியன்

உள்ளூர் மக்களுக்கு வெளியில் இருந்து பார்ப்பதற்கு சாதாரண வாழை மரத் தோப்பாக காட்சியளித்தது, நாளடைவில், வாழைத் தோட்டத்திற்குள் நடுவே கஞ்சா செடிகளையும் வளர்த்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோட்டத்தின் வழியே தினந்தோறும் பலரும் கடந்து சென்று வந்த நிலையில், இப்போது அதற்குள் கஞ்சா செடிகள் ஓங்கி செழிப்பாக வளர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. குடியாத்தாம் போலீசார், இப்படி வாழைத் தோப்புக்குள் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்த நபரை சுற்றி வளைத்து கைது செய்த னர். 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள அக்ரவாரம் கிராமத்தில் முனியன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் வாழை மரத்திற்கு இடையிடையே கள்ளத்தனமாக கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக வேலூர் மாவட்ட கண்பாளிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

கஞ்சா

இதைத் தொடர்ந்து முனியனின் விவசாய நிலத்தில் ஆய்வு செய்ய காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.

அங்கு போலீசார் சோதனை மேற்கொண்ட போது, வாழை தோட்டத்தில் சுமார் 40 கஞ்சா செடிகளை முனியன் வளர்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது.  இதன் அடிப்படையில் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார், வாழைத் தோட்டத்தின் உரிமையாளரான முனியனை கைது செய்ய தேடினார்கள். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இதைத் தொடர்ந்து முனியனை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

கஞ்சா

வாழைத் தோட்டத்திற்கு வாழை மரத்திற்கு இடையிடைய கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் வகையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை  விற்பனை செய்பவர்களையும் கடத்துபவர்களையும் தமிழக அரசு கண்காணித்து கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web