பிரபல நடிகை மீது வழக்கு பதிவு!! பரபரக்கும் திரையுலகம்!!
தமிழ் திரையுலகின் முண்ணனி பாடலாசிரியர் சினேகன். இவர் முண்ணனி கதாநாயகன் நடத்தி வரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். சினேகன் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து ‘சினேகம்’ என்ற பெயரில் அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சினேகன் தனது அறக்கட்டளை பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி அதன் மூலம் சின்னத்திரை நடிகையும் பா.ஜ.க. நிர்வாகியுமான ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.
இந்த புகாருக்கு நடிகை ஜெயலட்சுமி மறுப்பு தெரிவித்ததுடன், தன் மீதான குற்றச்சாட்டை சினேகனால் நிரூபிக்க முடியுமா என்று சவால் விடுத்தார்.தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும், சினேகம் அறக்கட்டளையின் நிறுவனருமான சினேகன் அளித்த புகாரின்பேரில் நடிகை ஜெயலட்சுமி மீது திருமங்கலம் போலீசார் 2 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் தமிழ் திரையுலகினர் மத்தியிலும் அரசியல் களத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!