நதியில் லாரி மூலம் கொட்டப்படும் ரசாயனம்!! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
டேங்கர் லாரி

தானேயில் வால்துனி நதி அமைந்துள்ளது. நதிக்கு டேங்கர் லாரியுடன் வந்த டிரைவர் ஒருவர் நதியில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனத்தை கலந்து கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

டேங்கர் லாரி

விரைந்து சென்ற போலீசார் சம்பவ இடத்தில் வைத்து 32 வயதான டேங்கர் லாரி டிரைவரை பிடித்து கைது செய்தனர். போலீசார் வந்து சேர்ந்த போது டேங்கர் லாரி டிரைவர் நதியில் சந்தேகத்திற்கிடமான விஷத்தன்மை கொண்ட ரசாயனத்தை நதியில் கலந்து கொண்டிருந்தார்.

போலீஸ்

இதைத்தொடர்ந்து போலீசாரிடம் பிடிபட்ட டேங்கர் லாரி டிரைவர் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.நதியை நஞ்சாக்கும் வகையில் ரசாயனத்தை கலந்த டேங்கர் லாரி டிரைவரை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web