சொத்து வரி செலுத்தாவிட்டால் வீடுகளுக்கு சீல் : சென்னை மாநகராட்சி அதிரடி!!

 
சொத்துவரி

சொத்து வரியை நீண்ட நாட்களுக்கு நிலுவையில் வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது புதிய அதிரடி நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சொத்து வரியை நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருக்கும் வீடுகளை சீல் வைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.சென்னையில் சொத்து வரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சீரமைக்கப்பட்ட சொத்து வரி பற்றி வீட்டில் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களுக்கு 3 முறை நோடடீஸ் வழங்கி, 6 மாதம் அவகாசம் கொடுக்கப்படும். வீட்டு உரிமையாளர்களே வீட்டை அளந்து வரி விதிப்பு பற்றி தெரிவிக்கலாம். இதில் அலட்சியம் காட்டினால் வீடு சீல் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. சென்னையில் சொத்து வரியை முழுமையாக வசூல் செய்தால் ஆண்டுக்கு சென்னை மாநகராட்சிக்கு ரூ.1,400 கோடி வருமானம் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. உயர்த்தப்பட்ட சொத்துவரி முழுமையாக வசூலிக்கப்பட்டால் சென்னை மாநகராட்சிக்கு மேலும் பல நூறு கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

 இந்நிலையில் வீட்டின் உரிமையாளர்களே வீட்டை அளந்து வரிவிதிப்பு பற்றி தெரிவிக்கலாம். இது ராஜ்ஜியம் காட்டினால் வீடு சீல் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சென்னையில் உள்ளனர். அவர்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சொத்துவரி குறித்து அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களுக்கு 3 முறை நோடடீஸ் வழங்கி, 6 மாதம் அவகாசம் கொடுக்கப்படும்.வீட்டு உரிமையாளர்களே வீட்டை அளந்து வரி விதிப்பு பற்றி தெரிவிக்கலாம். இதில் அலட்சியம் காட்டினால் வீடு சீல் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

From around the web