ஆகஸ்ட் 7ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அமைதிப்பேரணி!!

 
ஸ்டாலின்


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. இவருடைய  4வது நினைவு தினம்  ஆகஸ்ட் 7ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இது குறித்து திமுக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்  கலைஞரின் 4வது நினைவுநாள் அனுசரிக்கப்படுவதை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உட்பட திமுக கழக முன்னணியினர் அமைதிப் பேரணி நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அறிக்கை
ஆகஸ்ட் 7ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 8.30 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரர் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் சிலையில் இருந்து தொடங்கி காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web