முதல்வரின் சிறப்பு பணி அதிகாரி விபத்தில் பலி!! முதல்வர் இரங்கல்!!
உத்தர பிரதேசத்தின் பாஸ்தி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 28-ல், மோதிலால் சிங் தனது காரில் மனைவியுடன் கோரக்பூரில் இருந்து லக்னோவுக்கு சென்று கொண்டிருந்தார். காரை சந்தோஷ் குப்தா என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளனது.
விபத்தின் சத்தம் கேட்டு விரைந்து வந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த விபத்தில் மோதிலால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த மோதிலால் மனைவி வீணா சிங்கை மீட்டு கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பலியான மோதிலால் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில், மோதிலால் சிங், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், மோதிலால் சிங் மறைவுக்கு முதல்வர் யோகி இரங்கல் தெரிவித்துள்ளார்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!