ச்சோ.. க்யூட் ட்வின்ஸ்! குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

 
அமுல்யா குழந்தைகள்

நடிகர் அமுல்யா, தனது ட்வின்ஸ் குழந்தைகளின் புகைப்படத்தை முதல் முறையாக ரசிகர்களுக்கு பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. 

சாண்டல்வுட்டின் முன்னாள் நடிகை அமுல்யா,கடந்த மார்ச் 2022ல் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். தற்போது, ​​நடிகை அமுல்யா, அவரது இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு 52 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகள் குவிந்துள்ளது.

புகைப்படத்திற்கான கேப்ஷனாக, "ஆசிர்வதிக்கப்பட்டவள்" என்று தலைப்பிட்டுள்ளார். “கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக” என்று ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். 

"இரட்டைக் குழந்தைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டது, ஆண் குழந்தைகளும் தாயும் நலமாக இருக்கிறார்கள், இந்த பயணம் முழுவதும் எங்கள் மீது பொழிந்த அன்பிற்கு மனமார்ந்த நன்றி, நிம்மாஅமுல்யா" என்று நடிகை அமுல்யாவின் கணவர், கடந்த மார்ச் 1ம் தேதி, ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தார். 

அதே போல், கடந்த அன்னையர் தினத்தன்று, அமுல்யா தனது மகப்பேறு போட்டோஷூட்டிலிருந்து புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டு, “இரண்டு மாத தாய்மை! இது நிச்சயமாக என் வாழ்க்கையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயணமாக இருக்க வேண்டும்!நான் இரட்டைக் குழந்தைகளைப் பெறப் போகிறேன் என்று கேள்விப்பட்ட போது, என் இதயம் துடித்தது, என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. அவர்களின் சின்னஞ்சிறு உதைகள் கர்ப்பம் என் மீது வீசிய அத்தனை சவால்களையும் மறக்கச் செய்தது! ஆனால், நான் சொல்ல வேண்டும், இது அதே நேரத்தில் அன்பானதாகவும், அதிகமாகவும் இருந்தது.

ஒவ்வொரு தாயும் உலகிற்கு தைரியமாக முகம் கொடுக்கிறாள். ஆனால் பயணத்தில் ரோஜாக்களும் முள்ளும் அவளுக்கு மட்டுமே தெரியும்! இறுதியில், நான் அவர்களின் சிறிய கால்களைப் பார்க்கும் போது அல்லது அவர்களின் கைகளைப் பிடிக்கும் போது, ​​நான் என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன், தொடர்ந்து செய்வேன் என்று எனக்குத் தெரியும் என்று உருக்கமாக தெரிவித்திருந்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web