தோழியிடம் இருந்து பிரித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி!!

 
நட்பு

தர்மபுரி மாவட்டத்தில் பிறந்த மாணவி ஒருவர் சேலத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டுபடித்து வந்தனர். இந்த மாணவி சில நாட்களுக்கு காணாமல் போனதாக பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து  போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

போலீஸ்

காணாமல் போன கல்லூரி மாணவி  கோவையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தனது சீனியரான 3ம் ஆண்டு மாணவியுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் தன்பாலின காதலாக மாறியதாக கூறியிருக்கிறார். அதன் பின்னர்  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையிலும் இவர்களது பழக்கம் தொடர்ந்துள்ளது.

இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே பூதாகரமாகியுள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் சந்தித்துக் கொள்ள பெற்றோர்கள் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இதன் காரணமாக மாணவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.அதன் பின்னர் இருவரும் கோவையில் தனி வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இருவரையும் தர்மபுரி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

க்ரைம்

அப்போது மாணவி கழிவறைக்கு செல்வதாக சொல்லிவிட்டு பிளேடால் கழுத்து, கைகளில் சரமாரியாக அறுத்துக் கொண்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவியை மீட்ட போலீசார், அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதன் பின்னர் மாணவி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web