கல்லூரி மாணவி கடத்தல்! பெற்றோர் போலீசில் புகார்!

 
மாணவி கடத்தல் காணவில்லை

கல்லூரி மாணவி கடத்தப்பட்டதாக தர்மபுரியில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளது பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களது மகளை அந்த பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளதாக பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். 

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம், லளிகம்  பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியைக் காணவில்லை என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். தங்களது மகள், தர்மபுரி பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி மாயமானதாகவும், பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் தங்களது மகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். 

புகார் க்ரைம் காவல் நிலையம்

மேலும், அந்த புகாரில், தங்கள் மகளை ஜருகு பகுதியைச் சேர்ந்த விஜய் (20) என்ற வாலிபர்  கடத்திச் சென்று இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, காணாமல் போன மாணவி இன்னும் 18 வயதை எட்டாததால், அவர் கடத்தப்பட்டாரா? அல்லது காதல் வயப்பட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளாரா? வேறு ஏதேனும் காரணமா என்று தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web