சென்னையில் ரயில் மோதி கல்லூரி மாணவி பலி!

 
ரயில் மோதி ரயில்வே போலீசார்

சென்னை வண்டலூர் ரெயில் நிலையத்தில், தண்டவாளத்தின் குறுக்கே நடந்த படியே நடைமேடையில் ஏற முயற்சித்த கல்லூரி மாணவி, வேகமாக வந்த ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவி சோனியா (19) தனது நண்பர்களுடன் வண்டலூர் பூங்காவுக்கு சென்றிருந்தார். அதன் பின்னர் அவர்களுடன் சேர்ந்து திரும்பும் போது வண்டலூர் ரெயில் நிலையத்தில்  தண்டவாளத்தின் குறுக்கே நடந்து சென்று நடைமேடையில் ஏற முயற்சித்தார்.

வண்டலூர் ரயில்நிலையம்

உயரம் குறைவாக இருந்த சோனியா அவ்வாறு நடைமேடையில் ஏற முடியாத நிலையில், தண்டவாளத்தில் நடந்து சென்றார். அப்போது திடீரென்று ரெயில் மோதி கல்லூரி மாணவி சோனியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த சோனியா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவி சோனியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web