பேராசிரியரை அடித்து துவம்சம் செய்த கல்லூரி மாணவர்கள்!! பகீர் பிண்ணனி!!

 
சிவசங்கரன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் கணிதத் துறை தலைவராக இருப்பவர் சிவசங்கரன். இங்கு கணிதத்துறையில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர் ஒருவர், அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். 

இதனை அறிந்த சிவசங்கரன், படிக்கும் வயதிலேயே காதலில் கவனம் செலுத்தினால் கல்வி கெட்டுவிடும் என கண்டித்துள்ளார். அத்துடன் அவர்களின் பெற்றோர்களிடம் இதைப்பற்றி சொல்லி எச்சரித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர், சக மாணவர்கள் இரண்டு பேர் மற்றும் ஒருவர் என நான்கு பேர் வந்து கல்லூரியில் இருந்த பேராசிரியர் சிவசங்கரனை தாக்கியுள்ளனர்.

சிவசங்கரன்

இதில் காயமடைந்த சிவசங்கரனை மற்ற பேராசிரியர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களையும் கோவில்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் நிர்மலா இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி

இதில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 4 மாணவர்கள் மீது கோவில்பட்டி மேற்குக் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மாணவர்களிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அத்துமீறியதாகவும் மாணவர்கள் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் பேராசிரியர் சிவசங்கரனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web