உஷார்!! இந்தியாவில் மீண்டும் உயர்கிறது கொரோனா பாதிப்பு!!
இந்தியாவில் புதியதாக ஒரே நாளில் 16 ஆயிரத்து 047 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்தி சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் உஅர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை கூட்டியுள்ளது. இந்தியாவில் காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 047 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 90 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றால் ஒரே நாளில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 814 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 19 ஆயிரத்து 539 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 35 ஆயிரத்து 610ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 261 ஆக உள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துகொள்ள மத்திய அரசு பல்வேறு முன்னேச்சரிக்கை ஏற்பாடுக்ளை செய்து வருகின்றது. மேலும் மெகா தடுப்பூசி முகம்களும் நடத்தப்பட்டு வருகின்றது.