கொடூரம்!! 3 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்புக்களுக்கு தீ வைத்த ஆசிரியை!!
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் குழந்தைகளை 2 வயதிலேயே பள்ளியில் சேர்த்து விடுகிறோம். பெரிய தனியார் பள்ளிகளை பொறுத்தவரையில் குழந்தைகளை விடும் போது டயாப்பர் கட்டி அனுப்ப வேண்டும் என்பது விதியாகவே வைத்திருப்பர். அதே நேரத்தில் சற்று பணவசதி குறைவாக இருக்கும் பள்ளிகளில் இதற்காக தனிப்பட்ட ஆட்களை நியமிப்பர். அரசு ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி பள்ளிகள், தொடக்கப் பள்ளி செல்லும் குழந்தைகள் அவ்வப்போது போட்டிருக்கும் துணியிலேயே 1 அல்லது 2 போய்விடுவர். இதை சுத்தம் செய்வதற்காகவே வகுப்பறை வாசலில் ஆயாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பர்.
பெற்றோர்கள் பள்ளியில் விடும் சமயங்களில் அந்த ஆயாக்கள் கைகளில் பணம் தருவதுண்டு. தங்களது குழந்தை வகுப்பறையில் அசிங்கம் செய்து விட்டால் அதை சுத்தம் செய்துவிடுவதற்காக சன்மானம். இது காலப்போக்கில் சரியாகி விடும். இதே போல் கர்நாடகாவின் துமகுருவில் உள்ள ஒரு அங்கன்வாடியில் 3 வயது சிறுவன் ஒருவன் தனது கால்சட்டையில் சிறுநீர் கழித்தார். இந்த சிறுவன் வகுப்பறையில் இப்படி அடிக்கடி செய்துவிடுவதை வழக்கமாக வைத்திருந்தான். அங்கன்வாடி ஆசிரியை அவனை கண்டித்தார். இதே போல் சென்ற மாதத்தில் ஒரு முறை சிறுநீர் கழித்தபோது ஆத்திரத்தில் சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீவைத்து எரித்தார்.
இச்சம்பவம் ஆகஸ்ட் 22 ல் சிறுவன் கதற கதற நடத்தப்பட்டது. மொத்த வகுப்பறை பிள்ளைகளும் அரண்டு போய் அமர்ந்திருந்தனர். இது குறித்து சிறுவனின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் செப்டம்பர் 2 ம் தேதி ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அங்காடி குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் அப்பகுதியில் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!