நகையைத் திருடிய தி.மு.க. வார்டு செயலாளர்! சிசிடிவியில் சிக்கி கொண்ட பரிதாபம்!

 
நகை திருட்டு திமுக

தில்லுமுல்லு பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலையாக இருக்கிறது. மக்கள் சேவை என்கிற முனைப்பில் அரசியலுக்கு வருவோரின் எண்ணிக்கை ரொம்பவே குறைச்சல். அப்படியே இருந்தாலும், அவர்களை நம் மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை. வோட்டு பணம் வாங்கினால் என்னாவாகும் என்பதற்கு உதாரணமாக கட்சி பேதமின்றி, ஜெயித்து வந்தவர்கள் ஆங்காங்கே பல் இளித்து, அடாவடித்தனம் செய்வதைப் பார்க்க நேரிடுகிறது. நகைக் கடையில் திமுக வார்டு செயலாளர் தங்க நகையை திருடி வைத்துக் கொண்டு அதற்கு பதிலாக கவரிங் நகையை வைத்துச் சென்ற சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி திருச்செந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் எஸ்.என். கோபால் என்ற நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இந்த நகைக்கடைக்கு ஒரு பெண் தங்க நகை வாங்க சென்றுள்ளார். கடையில் உள்ள ஒரு நபர் அந்த பெண்ணுக்கு தங்க நகைகளை எடுத்துக் காண்பிக்கிறார்.

திமுக நகை திருட்டு

பின்னர் அவற்றை எடுத்து வைக்க அங்கிருந்த நகரும் போத அந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த கவரிங் செயினை வைத்துவிட்டு, அங்கிருந்த தங்க செயினை அபேஸ் செய்கிறார். இது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து நகைகளை ஆய்வு செய்த போது அதில் ஒரு நகை போலி நகை என்பதை கடை உரிமையாளர் கண்டுபிடித்தார். பின்னர் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த பெண் வசமாக சிக்கிக் கொண்டார். 4 நாட்களுக்கு முன்னர் அந்த பெண் நூதன முறையில் தங்க செயினை அபேஸ் செய்த காட்சியை பார்த்து கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அந்த பெண்ணை தேடியபோது,  பஜாரில் கண்டுபிடித்து விசாரித்தபோது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து நகையை மீட்ட கடை உரிமையாளர் அங்கிருந்து சென்றுவிட்டார். தற்போது சிசிடிவி காட்சியில் பிடிபட்ட அந்த பெண் யார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த பெண் குரும்பூர் திமுக நகரச் செயலாளர் பாலன்.கே.ராஜன் என்பவர் மனைவி பொற்கொடிதேவி என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் தி.மு.க.வின் அங்கமங்கலம் ஊராட்சி மன்ற 8-வது வார்டு செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தி.மு.க. வார்டு உறுப்பினர் நூதன முறையில் நகைக்கடையில் தங்க செயினை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வைரல் வீடியோ!! வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web