அடக் கொடுமையே!! சினிமா பாணியில் 3 பேரை திருமணம் செய்த பெண்!! கணவன்களுக்குள் கோஷ்டி மோதல்!!

 
வடிவேலு

 

இளம்பெண் 3 ஆண்களை திருமணம் செய்து கொண்டதால் யாருடன் வாழ்வது என்பது குறித்து 3 கண்வர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த வாய்த்தகராறு இறுதியில் வெட்டு குத்தில் முடிந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்களுக்கு பெண்கள் எதிலும் குறைந்தவர்கள் இல்லை என்பதில் பல்வேறு செயல்களில் நிரூபித்து வந்தாலும் இது அதிகம்தான் என்று சொல்லும் அளவுக்கு பல விநோத மற்றும் முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது.

கொலை

மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் கோகுல் (26). இவரது மனைவி யாஸ்மின் (25). கடந்த சில வருடங்களாக கோகுல் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததால், யாஸ்மின் குரோம்பேட்டையில் உள்ள துணி கடையில் தற்போது வேலை பார்த்து வருகிறார்.


இந்நிலையில், 5 பேர் கொண்ட கும்பலம் நேற்றிரவு கோகுலின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது. பின்னர் கோகுலிடம் பேச வேண்டும் எனக்கூறி அவரை வெளியே அழைத்து சென்றனர். இது எதையும் எதிர்பார்க்காத கோகுல் வீட்டை விட்டுவெளியே வந்ததும், 5 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கோகுலை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்த கோகுலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த தாம்பரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

போலீஸ்

அதில் கோகுலை வெட்டியவர்கள் அடையாளம் காணப்பட்டனர். தாம்பரத்தைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் அவரது நண்பர்களான அருண்ராஜ், ஜெய்கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின்னர் தனிப்படை போலீசார், குற்றவாளிகள் அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல பகீர் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோகுலின் மனைவி யாஸ்மினும், பிடிபட்ட விஜயகுமாரும் பள்ளியில் ஒன்றாக படித்து காதலித்து வந்ததாக தெரிகிறது. பெற்றோர்கள் சம்மதிக்காததால், உடனே சையது என்பவருக்கு யாஸ்மினை திருமணம் செய்து கொடுத்தனர். இந்த தம்பதிக்கு2 குழந்தைகள் இருந்த நிலையில், விஜயகுமாருடனான உறவை யாஸ்மின் துண்டிக்கவில்லை. இது குறித்து அறிந்த கணவர் சையது யாஸ்மினை பிரிந்து சென்றார். பின்னர் யாஸ்மின் விஜயகுமாருடன் ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பித்தார். அப்போது திடீரென்று யாஸ்மினுக்கு பள்ளிக்கூடத்தில் சீனியரான கோகுலுடன் திடீரென்று பழக்கம் ஏற்பட்டது. 

2 பேரை தொடர்ந்து 3வதாக கோகுலுக்கு யாஸ்மின் தூண்டில் போட்டுள்ளார். இதற்கிடையில் விஜயகுமார் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார்.இதை சாதகமாக்கிக் கொண்ட யாஸ்மின், கோகுலுடன் சேர்ந்து வாழ தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், சிறையில் இருந்து வெளியே வந்ததும், யாஸ்மினை அபகரித்த கோகுலை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவில் விஜயகுமாருக்கும், கோகுலின் நண்பர் அருண் ராஜுக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதன் தொடர்ச்சியாகவே கோகுல் மீது விஜயகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது.ஒரு பெண் 3 பேரை தொடர்ந்து திருமணம் செய்து ஒருவரையருவர் ஏமாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் யாருடன் வாழ வேண்டும் என்பதில் கணவர்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்ட சம்பவம் கொலை முயற்சியில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web