முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!! சுதந்திர தினத்தில் பரபரப்பு!!

 
முகேஷ் அம்பானி

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறது. அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது.

முகேஷ் அம்பானி

இந்த நிலையில் ரிலையன்ஸ் அறக்கட்டளைக்க் சொந்தமான மருத்துவமனைக்கு இன்று காலை தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் தம்மை தீவிரவாதி என்று கூறிக் கொண்டு, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

போலீஸ்

இது தொடர்பாக டிபி மார்க் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இன்று மட்டும் மருத்துவமனைக்கு 8 முறை இதேபோன்ற கொலை மிரட்டல் தொலைபேசிகள் அழைப்பு வந்திருக்கின்றன. இப்புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளனர். மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web