முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்!! பரபரக்கும் மும்பை!!

 
முகேஷ் அம்பானி

இந்தியாவின் முண்ணனி தொழிலதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி . இவரின் ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு கிளைகளுடன் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. இவருக்கு சொந்தமான தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் பல மாநிலங்களிலும் உள்ளன. இவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகேஷ் அம்பானி

நேற்று பிற்பகலில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் மேலும்  ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோரை கொலை செய்யப் போவதாகவும் கொலை மிரட்டல் விடுத்தார்.


இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் டி.பி. மார்க் போலீசில் புகார் அளித்தது. இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் போனில் கொலை மிரட்டல் மற்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வந்தனர்.

முகேஷ் அம்பானி

இதற்கிடையில் மும்பை போலீசாருக்கு அந்த மர்ம நபர் பீகார் பகுதியில் உள்ள தர்பங்காவில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் நேற்று நள்ளிரவில் மிரட்டல் ஆசாமியை அதிரடியாக கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொழில் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளதால் மருத்துவமனை மற்றும் முகேஷ் அம்பானி குடும்பத்தினர் மத்தியில் சற்று பதற்றம் குறைந்துள்ளது

From around the web