டிசம்பர் 5ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கலெக்டர் அறிவிப்பு!

 
நாளை இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?!

டிசம்பர் 5ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும், உள்ளூரில் பிரசித்த பெற்ற கோவில் திருவிழாக்களிலும், பண்டிகை விசேஷங்களிலும் மக்கள் அதிகளவில் பிற மாவட்டங்களில் இருந்து குவியும் நாட்களில், பொதுமக்களின் நலன் கருதியும், பாதுகாப்புக்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், இந்த திருவிழாக்களைமுன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். 

Tiruvarur

அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 

குறிப்பாக இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்வை காண நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

Local-holiday

இந்த நிலையில் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் டிசம்பர் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், டிசம்பர் 5-ம் தேதி விடுமுறை விடப்படுவதால் அதை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 10-ம் தேதி பணி நாளாக கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web