ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டால் பெறும் சரிவு.. அதானி நிறுவனம் கொடுத்த பதிலடி !!

 
adani

இந்தியாவின் பிரபல தொழில் அதிபரும், உலக பணக்காரர்களில் முதல் பத்து இடங்களில் இருப்பவருமான அதானி, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது தொழில் வளர்ச்சி குறுகிய காலத்தில் அரசு வளர்ச்சிபெற்றது. இந்த நிலையில், தற்போது அதானி நிறுவனம் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதானி நிறுவனம் மீது அமெரிக்காவின் நியூயார்க்கை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் எனப்படும் கார்பரேட் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தது. அதாவது அதானி நிறுவனம் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாகவும், கணக்குகளில் முறைகேடு செய்ததாகவும் அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. 

adani

இது இந்திய பங்குச்சந்தையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதானி நிறுவனத்தில் முதலீடு செய்த நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளன. 

இந்த நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கு அதானி நிறுவனம் நேற்று பதில் அளித்து உள்ளது. 413 பக்கங்களில் வெளியிட்டுள்ள இந்த விளக்கத்தில், ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின்னால் மறைமுக நோக்கம் உள்ளது. திட்டமிட்ட தாக்குதல் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை. எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தேவையற்ற தாக்குதல் மட்டுமல்லாது, இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்களின் சுதந்திரம், ஒருமைப்பாடு, தரம், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் லட்சியம் ஆகியவற்றின் மீது தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதலாகும்.

adani

இந்த அறிக்கை முழுவதும் முரண்பாடுகளால் நிறைந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட சிறிய விற்பனையாளர் மற்றும் எண்ணற்ற முதலீட்டாளர்களின் செலவில் தவறான வழிகளில் பெரிய நிதி ஆதாயத்தை பெறுவதற்காக ஹிண்டன்பர்க், பத்திரங்களில் தவறான சந்தையை உருவாக்குவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. இந்த அறிக்கை முற்றிலும் சுயநல நோக்கங்களுக்காகவும், அன்னிய செலாவணி சட்டங்களை அப்பட்டமாக மீறியதாகவும் உள்ளது. இந்த அறிக்கை சுதந்திரமானதோ அல்லது நன்றாக ஆய்வு செய்யப்பட்டதோ அல்ல. சட்டங்களுக்கு இணங்குகிறோம் இந்த விவகாரத்தில் அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு நாங்கள் இணங்குகிறோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

எங்கள் பங்குதாரர்கள் அனைவரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில், நிர்வாகத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அதானி குழுமம் மிகவும் வலுவான உள் கட்டுப்பாடுகள் மற்றும் தணிக்கைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. இந்த குழுமத்தின் அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் வலுவான நிர்வாக கட்டமைப்பைக் கொண்டுள்ளன,  என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
 

From around the web