பேருந்திலேயே பிரசவம்!! டெல்லியில் நிகழ்ந்த வினோதம்!!

 
டெல்லியில் பேருந்திலேயே பிரசவம்

ஆட்டோவில் பிரசவம், ஆம்புலன்ஸில் பிரசவம் என பல செய்திகளை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் கொஞ்சம் வினோதமாக பேருந்திலேயே பிரசவம் ஆன சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது. டெல்லியில்  இருந்து  உத்தரப்பிரதேச மாநிலம் கன்னௌஜ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் பேருந்திலேயே பிரசவம்

பேருந்து ஓட்டுனர் மருத்துவமனைக்குச் செல்வதற்குள் பேருந்துக்குள்ளேயே அப்பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து பெண்ணின் கணவர் சோமேஷ் குமார் கூறுகையில், எங்கள் சொந்த கிராமத்துக்குச் சென்று கொண்டிருக்கும் போது பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது. வலி கடுமையானதைத் தொடர்ந்து பேருந்தை ஓட்டுநர் சாலையோரமாக நிறுத்தினார். பேருந்திலேயே குழந்தை பிறந்துவிட்டது.

டெல்லியில் பேருந்திலேயே பிரசவம்

உடனடியாக பேருந்திலேயே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு குழந்தையையும் தாயையும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்திருப்பதாகக் கூறினார். பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆனதால் சக பயணிகள் சற்று பதற்றம் அடைந்தனர்.   

From around the web