தேவர் குருபூஜை கொண்டாட்டம்! கல்லூரி மாணவர் துடிதுடித்து மரணம்!

 
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி

இன்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் தேவர் ஜெயந்தி  குருபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆழ்வார்குறிச்சி அருகே தேவர் ஜெயந்தி குருபூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவர், கொடிக் கம்பத்தில் கொடி கட்ட முயன்ற போது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கோவிந்தபேரி வடக்கு தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். கூலித் தொழிலாளியான இவருக்கு முத்துக்குமார் (18) உள்பட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

முத்துக்குமார் அம்பாசமுத்திரத்தில் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு படித்து வந்தார். இன்று முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா என்பதால் அதை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை கோவிந்தபேரியில் அப்பகுதி பொதுமக்கள் செய்து வந்தனர். 

Shock

இதற்காக நேற்றிரவு அங்குள்ள முப்புடாதி அம்மன் கோவில் முன்பு கொடியேற்றுவதற்காக இரும்பு கம்பத்திற்கு பெயிண்ட் அடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் கொடிக் கம்பத்தை நடும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கம்பத்தின் மேல் பகுதியில் சென்ற மின்வயர் மீது இரும்பு கம்பம் உரசி உள்ளது. இதனால் அந்த கம்பத்தில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அந்த நேரத்தில் கம்பத்தில் ஏற முயன்ற முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

Alwarkurichi

இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முத்துக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web