இப்படி பண்ணிட்டாளே... !! காதல் திருமணம் செய்த புதுமணப்பெண் மர்ம மரணம்!! கதறும் பெற்றோர்!!

 
திருமணம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.பிரம்மதேசம் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவரது மகன் கோபிநாத் (25) அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்வி என்ற 22 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.இதைத்தொடர்ந்து இவர்களது காதல், திருமணத்தில் முடிந்தது. அதன்படி கடந்த ஜூன் 27ம் தேதி சென்னையில் உள்ள ஒரு கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.


பெற்றோர் எதிர்ப்பை மீறி கலைச்செல்வி திருமணம் செய்து கொண்டார். இதனால் அவரின் தந்தை முருகன், தனது மகளை கடத்தி சென்று விட்டதாக கடந்த 2ம் தேதி பெரியதச்சூர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து இரு தரப்பையும் அழைத்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இளம் பெண் கலைச்செல்வி சொந்த விருப்பத்தின் பேரில் கணவன் கோபிநாத்துடன் வீட்டுக்கு போலீசார் அனுப்பி வைத்ததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 

விழுப்புரம்
இந்நிலையில் கலைச்செல்வி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தந்தை முருகன் வீட்டுக்கு செல்வதாக கூறி விட்டு கணவன் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் சென்று சேராததால், கோபிநாத் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது அங்கும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இதற்கிடையில் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் காலை கலைச்செல்வி பிணமாக கிடந்த செய்தியை அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் கலைச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதனிடையே தனது மகள் கலைச்செல்வியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தந்தை முருகன் போலீசில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து  கலைச்செல்வியின் கணவர் கோபிநாத், மாமனார் ஸ்ரீதர் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான  பூமாதேவி (50) என்பவரை தேடி வருகின்றனர். திருணமாகி ஒரு மாதமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

காதலியுடன் பேசிக்கொண்டே கிணற்றில் குதித்த காதலன்!!
திருமணமான 37 நாட்களில் இளம்பெண் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தற்கொலையா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web