நடிகர் பாலாவின் மனைவி ரகசிய திருமணம்!! பரபரக்கும் கோலிவுட் வட்டாரம்!!

 
அம்ருதா

2003-ம் ஆண்டு வெளியான ‘அன்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் பாலா. அதனைத் தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், களிங்கா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் அவரால் நிலைக்க முடியவில்லை. இதையடுத்து மலையாள படங்களில் நடிக்க தொடங்கிய பாலாவுக்கு அடுத்தடுத்து வெற்றிகளும் வாய்ப்புகளும் குவிந்தன. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

அம்ருதா கோபிசந்தர்

இந்ந நிலையில், தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்றார் பாலா. அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகி அம்ருதா சுரேஷுடன் காதல் மலர்ந்தது. இதையடுத்து 2010-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்தனர். 2012-ம் ஆண்டு அவர்களுக்கு அவந்திகா என்ற மகள் பிறந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.

இந்த நிலையில், தமிழில் யாருடா மகேஷ், தோழா, பெங்களூர் நாட்கள் உள்பட சில படங்களுக்கு இசை அமைத்த மலையாள இசை அமைப்பாளர் கோபி சுந்தருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியானது. இதையடுத்து இருவரும் காதலித்து வருவதாக கிசு கிசுக்கப்பட்டது. 

இந்நிலையில் அம்ருதா சுரேஷ் தனது பிறந்த நாள் கொண்டாட்ட படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இசையமைப்பாளர் கோபி சுந்தர், அம்ருதா சுரேஷின் சகோதரி அபிராமி உள்ளிட்டோர் இருக்கின்றனர். 

அம்ரிதா தனது பதிவில், கோபி சுந்தர், “உனக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகளில்லை. எனக்கு இது மிகவும் சிறப்பான பிறந்த நாள். என் கணவரே, நீ சிறப்பானவர் . நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். கோபி சுந்தரை அம்ருதா கணவர் என குறிப்பிட்டுள்ளதால் இருவருக்கும் திருமணம் முடிந்ததா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web