இதப் பார்றா!! கல்யாண வீட்டில் ஹாயாக காபி குடிக்கும் கரடி!!

 
கரடி

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே இத்தலார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹட்டாரி நஞ்சன். இவர் மதிமுக மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது பேரன் பவிஷ், டாக்டராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இவரது பேரனின் திருமணம் நடைபெற்றது. இதனால் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.

கரடி

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திருமண நிகழ்ச்சிக்காக மணமகன் வீட்டார் அனைவரும் கல்யாண மண்டபத்திற்குச் சென்றனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவு தேடி கிராமப் பகுதிக்குள் உலா வந்த கரடி, தீடீரென அழையா விருந்தாளியாக மணமகன் வீட்டிற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மிக்சர், இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டும், காபியையும் குடித்துக் கொண்டிருந்தது.

அப்போது, வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் நீண்ட நேரமாக குறைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் குடியிருப்பு வாசிகள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபோது கரடி வீட்டுக்குள் நுழைந்து உணவுப் பொருட்களை சூறையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அந்த நாய் நீண்ட நேரமாக குறைத்துக் கொண்டிருந்ததால் குடியிருப்பு பகுதியில் இருந்து கரடி வெளியேறியது.

5வது திருமணம்

இந்நிலையில், திருமண நிகழ்ச்சிக்காக வீட்டில் இருந்த அனைவரும் திருமண மண்டபத்திற்கு சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கிராமப் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத் துறையினர் கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web