இதப் பார்றா!! விநாயகருக்கே ஆதார் அட்டை!! பக்தர்களின் அட்ராசிட்டி அலப்பறைகள்!!
இந்தியா முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிலர் புது முயற்சியாக விநாயகருக்காக ஒரு பிரத்யேக ஆதார் அட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் தான் விநாயகருக்கு ஆதார் அட்டை வடிவில் விநாயகர் சதுர்த்தி பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆதார் அட்டையில் உள்ள தகவலின்படி, விநாயகப் பெருமானின் முகவரி கைலாசம் என்றும் அவர் பிறந்த தேதி ஆறாம் நூற்றாண்டு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதில் அவருடைய தந்தையின் பெயர் மகாதேவ் என்றும் அவரது முகவரியாக கைலாச மலை, மேல்தளம், மானசரோவர் எரி அருகில், கைலாஷ், பின்கோடு - 000 001 என குறிப்பிட்டுள்ளனர். இதனை தயாரித்தவர்கள், விநாயகருக்கு என்றே ஒரு பிரத்யேக ஆதார் எண்ணையும் உருவாக்கி இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டையின் தாக்கம் மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்பது பல்வேறு வடிவங்களில் பிரதிபலிக்கிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!