போடா... மயி.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி!

 
பொன்முடி

என்னால நிம்மதியா தூங்க முடியல... காலையில தினந்தோறும் எழுந்திருக்கும் போது.. இன்னைக்கு என்ன பிரச்சனையை  கிளப்பியிருக்காங்களோன்னு நெனைப்பேன்.. கட்சிக்காரர்கள், பதவியில் இருப்பவர்கள் பொறுப்போடு இருக்க வேண்டும்’ என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசி ஒரு மாதம் கூட நிறைவடையவில்லை. அதற்குள்.. ஓசி பயணம் என்று பேசி பெண்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்திய அமைச்சர் பொன்முடி தற்போது  மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

நேற்று கொட்டுகிற மழையில், அமைச்சர் பொன்முடியை முற்றுகையிட்டு போராடிய மக்களை பார்த்து போடா.. மயிறு என்று ஆபாசமாக பேசி, பொறுப்பான அமைச்சர் அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்.

பொன்முடி

விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் அடுத்த சித்தலிங்க மடம் கிராமத்தில், எடப்பாளையம் தனி ஊராட்சி வருவாய் சேர்ப்பதால் சித்தலிங்க மடம் பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு கொட்டும் மழையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள், கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய போது பொதுமக்களில் ஒருவரை பார்த்து போடா ம..று என்று அத்தனை கூட்டத்திற்கு மத்தியில், தன்னிலை மறந்து அருவருக்கத் தொணியில் பேசி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி.

pon

 இதனால்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியும், கோபம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டு, வாக்குவாதம் செய்த போது,  திமுக ஆட்சியில் தான் இந்த கிராமத்திற்கு மகளிர் மேல்நிலைப் பள்ளி கொண்டு வரப்பட்டன என்று தெரிவித்தார்.

அதற்கும் சளைக்காமல், அதெல்லாம் எங்களுக்கு தெரியாது என்று பொதுமக்கள் பகுதியில் நின்றிருந்த ஒருவர் சொன்ன போது, ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி, கடந்த 10 வருஷங்களாக தமிழகத்துல யார் ஆட்சியில் இருந்தது. அப்ப இந்த கேள்வியைக் கேட்க வேண்டியது தானே என்று கோபப்பட்டார். 

இதைக் கேட்டு மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிமுக- திமுக என கட்சி பற்றி எல்லாம் நீங்க பேசாதீங்க என்று சொல்லி ஒன்றாக சத்தம் போட்டனர்.  இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.  அதன் பின்னர், சப்தமில்லாமல் அமைச்சர் பொன்முடி அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web