மிஸ் பண்ணீடாதீங்க !! நாளை 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்!!

 
தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது . கடந்த சில வாரங்களாக மர்மக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. கொரொனாவை கட்டுப்படுத்த மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வந்தன. இது வரை மொத்தம் 36 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. நாளை சென்னை மாநகராட்சி முழுவதும் 37வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தடுப்பூசி


இந்த தடுப்பூசி முகாமில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.  தற்பொழுது, 75 நாட்களில்  அதாவது  செப்டம்பர்  30ம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில்  18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியினை 2 தவணைகள் செலுத்திக்கொள்ளலாம்.

மெகா தடுப்பூசி முகாம்

இந்த தடுப்பூசி செலுத்தி  6 மாதங்கள் (அ) 26 வாரங்கள் நிறைவடைந்தவர்கள்  முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு  கார்போவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 42,35,939 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள். ஆனால் இதுவரை  6,04,042பேருக்கு மட்டுமே  பூஸ்டர் டோஸ்  தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு  செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே. இந்த தடுப்பூசிகளை  நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் இலவசமாக செலுத்தப்படும். செப்டம்பர் மாதம் முடிவடைய இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web