வரதட்சணை கொடுமை!! மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவர்..

 
கொலை

வேலூர் அருகே வரதட்சணை கேட்டு கொடுமை செய்து மனைவியை, மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த கணவர், மாமனாரை, போலிசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம்   திருமணி அடுத்த உண்ணாமலை சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் மணி - முனியம்மா என்ற தம்பதியினர். இவர்களுக்கு  2 மகள்கள் உள்ளனர். இவர்களின் 2வது மகள் லட்சுமி. இவருக்கும் இவர்களின் உறவினரான ஆட்டோ ஓட்டுனர் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

லட்சுமி

ராஜேஷ் மற்றும் லட்சுமிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு லட்சுமி வீட்டில் உயிரிழந்ததாக அவரது கணவர் பெண் வீட்டிற்கு   தகவல் தெரிவித்துள்ளார். இதனால் பதறிபோன, பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேரில் சென்று பார்ப்பதற்குள் , லட்சுமியின் உடலை அப்புறப்படுத்தியுள்ளனர். திருமணம் ஆன நாளிலிருந்தே லட்சுமியை அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் துன்புறுத்தி வந்ததாகவும் இவர்கள் தான் நேற்று லட்சுமியை அடித்து மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும்    உறவினர்கள்  குற்றம்சாட்டுகின்றனர்.  

மறியல்

இதையடுத்து அவர்கள்  மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருதம்பட்டு காவல்நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். ஆனால்   உரிய நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த   லட்சுமியின் உறவினர்கள்   திருமணியில் இருந்து விருதம்பட்டு செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லத்தேரி போலிசார் பேச்சுவார்த்தை நடத்தியதை எடுத்து மறியல் கைவிடப்பட்டது.  

From around the web