அதிரடியாக உயர்ந்த தங்கம்!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
தங்கம்


சென்னையில் இன்று ஆபரண தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினை ஆகிய காரணத்தினால் மக்கள் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்கின்றனர்.  இதனால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அவர்கள் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

தங்கம்

முதலீட்டாளர்கள் மட்டுமல்லாது இல்லத்தரசிகளும்  தங்கள் வருமானத்தை தங்கமாக வாங்கி வைத்து முதலீடு செய்வதை தற்போது வழக்கமாக வைத்துள்ளனர். தற்போது ஆடி மாதம் என்பதால் இனி வரும் சுப நிகழ்ச்சிகளுக்காக இல்லத்தரசிகள் தங்க நகைகளை வாங்கி வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தங்கம்

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதன்படி இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.39,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.30  உயர்ந்து ரூ4,880ஆக விற்பனையாகிறது. ஆபரண தங்கத்தின் விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.அதேபோல, வெள்ளியின் விலையும் கிராம் ஒன்றுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.64.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.64,500ஆக உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web