டிரைவர், கண்டக்டரை அரிவாளால் வெட்டி பணம் பறிப்பு!! பட்டப்பகலில் பயங்கரம்!!!

 
பணம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மருதேரியில் இருந்து சிங்கபெருமாள் கோவில் வரையில் நகர பேருந்து (தடம் எண் 60எம்) இயக்கப்படுவது வழக்கம்.வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு மருதேரி கிராமத்தில் இருந்து பேருந்து இயக்கப்பட்டது. அப்போது பணியில் கொண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த  டிரைவர் செந்தில்குமார் (38) மற்றும் செங்கல்பட்டு பெரிய நத்தத்தை சேர்ந்த கண்டக்டர் கோபாலகிருஷ்ணன் (57) ஆகியோர் இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கண்டக்டர் கோபாலகிருஷ்ணனிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

கொலை

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கோபாலகிருஷ்ணன் 3 மர்ம ஆசாமிகளும் சரமாரியாக தாக்கிவிட்டு அவரிடம் இருந்த பணப்பையை அபகரித்துக் கொண்டனர். இதனை பார்த்து அதிர்ந்த போன டிரைவர் செந்தில்குமார், 3 பேரிடமும் பணப்பையை திருப்பி வாங்க முயற்சித்தார். இதில் ஏற்பட்ட மோதலில் 3 பேரும் அரிவாளால் செந்தில்குமாரை வெட்டிவிட்டு 2 செல்போன்களை பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்து சென்றனர்.

இதில் செந்தில் குமாருக்கு கை,தலை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து டிரைவர் செந்தில்குமாரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைககு அழைத்து சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி மற்றும் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற 3 மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். மேலும் நடத்துனர் கோபாலகிருஷ்ணனிடம் இருந்து பறிக்கப்பட்ட பணப்பையில் ரூ.8,500 ரொக்கம் இருந்துள்ளது. மேலும் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பயணச்சீட்டுகளும் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.

செங்கல்பட்டு

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் 3 மர்ம ஆசாமிகள் அரசு பஸ் கண்டக்டர், டிரைவரிடம் வழிப்பறி செய்துவிட்டு, அவர்களை அரிவாளால் தாக்கி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் திருப்போரூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web