வாகன ஓட்டிகளே உஷார்!! லிப்ட் கொடுத்தவரை கொலை செய்ய முயற்சி!! பகீர் பிண்ணனி!!

 
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் பிஞ்சூர் பகுதியில் வசித்து வருபவர்  சரவணன்.  மேல்புழுதியூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் செங்கம் பகுதியில் உள்ள மருந்து கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கமாக வேலை முடிந்து வீட்டுக்கு தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த போது திருவள்ளுவர் நகர் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தனக்கு லிப்ட் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.

திருவண்ணாமலை

இதையடுத்து அந்த நபரை அழைத்துக் கொண்டு சென்ற போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தன் பணம் கீழே விழுந்து விட்டதாகவும் வாகனத்தை நிறுத்தமாறும் கூறியுள்ளார். இது உண்மை என நம்பி தனது மோட்டர் பைக்கை சாலை ஓரமாக சரவணன் நிறுத்தியுள்ளார். உடனே அடையாளம் தெரியாத அந்த நபர் திடீரென தான் அணிந்திருந்த பெல்டால் சரவணனின் கழுத்தை இறுக்கியுள்ளார்.

மேலும் அருகில் இருந்த முட்பதற்குள் இழுத்துச் சென்று கொலை செய்ய முயற்சித்து அவரிடம் இருந்த பணத்தையும் பறிக்க முயன்று உள்ளார். அதற்குள் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கீழே சாய்ந்து கிடக்கும் மோட்டார் பைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சரவணனின் அலறல் சத்தம் கேட்டு புதருக்குள் சென்று பார்த்தபோது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருளில் தப்பி ஓடி மறைந்துள்ளார். 

பின்னர் சரவணனை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கம் வெளிவட்டச் சாலை பல ஆண்டு காலமாக கிடப்பில் இருப்பதால் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே சென்றுவர முடிகிறது. 

திருவண்ணாமலை

இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் தனியாக செல்லும் இருசக்கர வாகனங்களை வழிமடக்கியும், இதுபோன்று லிப்ட் கேட்டு அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் நடமாடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web