மீண்டும் நேபாளத்தில் நிலநடுக்கம்!! பீதியில் மக்கள்!!
இன்று அதிகாலை 4.37 மணியளவில் நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து வடகிழக்கே 155 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி இருக்கிறது.இது குறித்து தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறும்போது, ‘‘இந்த நிலநடுக்கம் 100 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. மேலும் நிலநடுக்க பாதிப்புகள் குறிந்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோன்றதொரு நிலநடுக்கம் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி காத்மண்டுவில் உணரப்பட்டது. இது 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதற்கும் முன்னதாக இதே காத்மண்டுவில் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியது.
8,964 பேரை பலி வாங்கிய நிலநடுக்கம் இதே காத்மண்டு மற்றும் பெகாரா நகரங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி ஏற்பட்டது. நிலநடுக்கத்தில் சிக்கி 22 ஆயிரம் பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியிலேயே தங்கள் வாழ்நாளை கழித்து வருகின்றனர்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!