ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரசி!! எப்போது விநியோகம்.?

 
செறிவூட்டப்பட்ட அரசி

நாடு முழுவதும் பெரும்பாலான மக்களுக்கு இரும்பு சத்து குறைபாடு உள்ளதால் ரத்த சோகை போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் உள்ளனர். இதனை தடுக்க  தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் இரும்புச் சத்து உடைய செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேஷன்

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் போதிய அளவுக்கு இரும்புச் சத்து  இல்லாமல் இருப்பதை மத்திய அரசு கண்டறிந்து இத்தகைய நடவடிக்கையை   எடுத்தது. இரும்புச் சத்து   இல்லாததால்,   அவர்கள்  ரத்த சோகை   போன்ற   ஊட்டச்சத்து   குறைபாடுடன் உள்ளனர்தற்போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் புழுங்கல் அரிசி, பச்சரிசியில் மாவுச் சத்து, புரதச் சத்துக்கள் உள்ளன.   எனவே,  நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இரும்புச் சத்து கிடைக்க, ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க மத்திய அரசு முடிவு செய்து, மாநில அரசுகளுடன் இ ணைந்து செயல்படுத்தி  வருகிறது. அதில் இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் கலந்த கலவை சேர்க்கப்படும்.

ரேஷன்

அந்த கலவை அரிசி வடிவில் மாற்றம் செய்யப்பட்டு, செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றப்படும். இதையடுத்து, 100 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ என்ற வீதத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் சோதனை முறையில் கடந்த அக்டோபர் 2020 ஆம் ஆண்டு திருச்சியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் விருதுநகர், ராமநாதபுரத்திலும் அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அந்தியோதயா அட்டைதாரர்களுக்கும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் செய்யப்பட உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

From around the web