பரபரப்பு!! சில்வர் பாத்திரத்தில் தலை மாட்டிய குழந்தை!.. பாத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை !!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள விசாலாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோனத். இவர் ராணிப்பேட்டையில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் இவரது ஒன்றரை வயது மகன் ஜோவித் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். அப் போது எதிர்பாராத விதமாக சில்வர் பாத்திரம் தலையில் மாட்டிக்கொண்டு சிறுவன் வெளியில் வராமல் தவித்துள்ளான். இதனை கண்ட சிறுவனின் பெற்றோர் குழந்தையை மீட்க போராடினார். ஆனால் முடியாததால் அவர்கள் குழந்தையை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டு சென்றனர் .
பின்னர் அங்கு இருந்த மருத்துவர்கள் மற்றும் காவல்துறை தீயணைப்பு துறை ஆகியோர் ஒன்றரை வயது குழந்தையான ஜோவித்தின் தலையில் மாட்டி இருந்த சில்வர் பாத்திரத்தை குழந்தைக்கு எந்தவித பாதிப்பில்லாமல் வெட்டி எடுத்து மீட்டனர். பின்னர் குழந்தைக்கு முதலுதவி கொடுத்த பிறகு பாதுகாப்பாக அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்..
வாலாஜாபேட்டை அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் தலையில் சில்வர் பாத்திரம் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தைகள் விளையாடும்போது பெற்றோர் குழந்தைகளை கவணித்த வண்ணம் இருக்க சமூக அர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.