பரபரப்பு!! மாணவன் கொலை வழக்கில் மாணவியின் தாயார் திடுக்கிடும் வாக்குமூலம்!

 
சகாயமேரி

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நேரு நகரில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் காரைக்கால் நியாயவிலைக் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவரது 2வது மகன் பால மணிகண்டன் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சிக்காக காலையில் சென்ற சிறுவன் மதியம் வீடு திரும்பிய நிலையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்தபோது பள்ளியில் காவலாளி கூல்டிரிங்ஸ் கொடுத்ததாகவும், அதை சாப்பிட்டதிலிருந்து வாந்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவனை சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பாலமணிகண்டன்

அங்கு பரிசோதனை செய்தபோது மாணவன் பாலமணிகண்டன் குடித்த குளிர்பானத்தில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே மாணவனிடம் குடித்த குளிர்பானத்தை அவனது தாய் கொடுத்ததாக பள்ளியின் காவலாளி கொடுத்தது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தாங்கள் குளிர்பானம் கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வாட்ச்மேன் தேவதாஸ் என்பவரிடம் இதுகுறித்து விசாரித்தபோது, மாணவன் பால மணிகண்டன் உறவினர் என ஒருவர் குளிர்பானம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மாணவன் பயிலும் அதே வகுப்பை சேர்ந்த மாணவியின் பெற்றோர் குளிர்பானம் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் சிறுவனின் தாய் மாலதி, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சகாய ராணி விக்டோரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

அந்த புகாரில், தனது மகன் பாலமணிகண்டன் கல்வி மற்றும் இதர கலைகளில் சிறந்து விளங்குவதால், இதை பொறுக்க முடியாமல் மாணவியின் தாயார் குளிர்பானத்தில் விஷம் கலந்து அதை காவலாளி மூலம் தனது மகனுக்கு கொடுத்து கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார். இதனிடையே விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து பள்ளி மாணவன் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான்.ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கினர்.

சகாயமேரி

மேலும் அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டால் மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காரைக்கால் ஆட்சியர் முகமது மன்சூர் உறுதியளித்தார். மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா போலீசில் தன் மகளை விட பாலமணிகண்டன் நன்றாக படித்து வந்ததால் அவருக்கு குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக  வாக்குமூலம் அளித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web