வெடித்து சிதறிய சிலிண்டர்! இரண்டாக உடைந்த கார்! கோவையில் பரபரப்பு!

 
கார் சிலிண்டர் வெடித்தது தீயணைப்பு

கோவையில் நின்று கொண்டிருந்த மாருதி கார் ஒன்றில் இன்று அதிகாலை நான்கு மணிக்கு திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் கார் இரண்டு துண்டுகளாக சிதறியது. சம்பவ இடத்திலேயே இந்த விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனும், அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்

கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலருகில் இன்று அதிகாலை 4 மணியளவில், பயங்கர சப்தத்துடன் நின்று கொண்டிருந்த மாருதி காரில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. 

கார் சிலிண்டர்

இந்த வெடி விபத்தில், கார் இரண்டாக உடைந்து தீப்பற்றி மளமளவென எரிய துவங்கியது. கார் வெடித்து சிதறியதில், அருகில் இருந்த கடைகளுக்கும் வேகமாக தீ பரவியது. உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர்.

தீயைக் கட்டுக்குள்  கொண்டு வந்த பின்னர், காரில் சோதனை மேற்கொண்ட போது ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது. கார் வெடித்தது குறித்து கோவை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மாருதி காரின் பதிவு எண்ணைக் கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், கார் பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது. பிரபாகரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பே காரை விற்பனை செய்து விட்டதாக பிரபாகரன் தெரிவித்துள்ளார். 

கார் சிலிண்டர் வெடித்தது

காரில் சிலிண்டர் வெடித்தது விபத்தா அல்லது ஏதேனும் சதி செயலா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவைக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் ஆகியோர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web