மருத்துவரிடம் ரூ 70 லட்சம் மோசடி செய்த போலி ஐஏஎஸ்!! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
லட்சுமணன்


சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செல்வகுமார் (62) என்பவர் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர் ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சென்று பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னிடம் பண மோசடி நடைபெற்றதாகவும், தன்னை ஏமாற்றிப் பணம் பறித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என்றும் தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

மோசடி

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘செவகுமார், போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பின்னர் அங்கேயே மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார். செல்வகுமாரின் நண்பர்கள் மூலம் சசிகுமார் என்பவரின் பழக்கம் ஏற்பட்டது. இவர் சேலத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. செல்வகுமாரிடம், சசிகுமார் (46) தொடர்ந்து ஆசை வார்த்தைகளை பேசி பணம் கறந்துள்ளார். அதன்படி சசிகுமார் தன்னை ஒரு ஐஏஎஸ் அலுவலர் என்றும், தன்னால் அகில இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர் பதவியை செல்வகுமாருக்கு வாங்கித்தர முடியும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய செல்வகுமார், சசிகுமரிடம் 3 தவணையாக தான் பணியாற்றும் மருத்துமவனையில் வைத்து சுமார் ரூ.70 லட்சம் வரை கொடுத்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்டதுடன் சசிகுமாரின் நடவனடிக்கை மாறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

போலீஸ்

இதனால் விரக்தியடைந்த செல்வகுமார், தான் கொடுத்த ரூ.70 லட்சத்தை திருப்பித் தருமாறு சசிகுமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லாததால் டாக்டர் செல்வகுமார் போலீசை நாடி வந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்துபண மோசடி செய்த சசிகுமாரை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் சேலத்தில் பதுங்கியிருந்த போலி ஐஏஎஸ் ஆசாமி சசிகுமாரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சசிகுமார் காவலராகப் பணிபுரிந்து, மோசடிப் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்த சசிகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து போலி ஐஏஎஸ் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார், சசிகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web