பிரபல ஜோதிடர், இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி! தாய் உயிரிழப்பு!

 
ஜோதிடர் பிரசன்னா

இந்து மக்கள் கட்சியின் ஜோதிட பிரிவின் மாநில துணைத் தலைவராக பதவி வகிப்பவர் பிரச்சன்னா. பிரபல ஜோதிடரான பிரசன்னா,  கோவை செல்வபுரம் பகுதியில் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு, சென்னை பழைய வண்ணாரபேட்டை பகுதியைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் கருப்பையா (45), என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் பழக்கமும் ஏற்பட்ட பின்னர், இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான காலி இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் இருக்கும் தன் சொத்து தொடர்பான சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்று கருப்பையா, ஜோதிடர் பிரசன்னாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு, மாங்கல்ய பூஜை நடத்த வேண்டும் என்று ஜோதிடர் பிரசன்னா தெரிவித்துள்ளார். அதை நம்பிய கருப்பையா, பிரசன்னாவிடம் கடந்த 2020-ம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக ரூ.25 லட்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், கருப்பையாவின் மனைவியின் 15 சவரன் தாலி சங்கிலியையும் பிரசன்னா வாங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

ஜோதிடர் பிரசன்னா

கருப்பையாவிடம் இருந்து பணம், நகை என வாங்கிக் கொண்ட பிறகும் இடப் பிரச்சனையை பிரசன்னா தீர்த்து வைக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். இதையடுத்து, பிரசன்னாவிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்காததால், இதுகுறித்து கருப்பையா கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார், பிரசன்னா, அவர் மனைவி அஸ்வினி, ஹரி பிரசாத், பிரகாஷ் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிந்தனர்.

ஜோதிடர் பிரசன்னா

இதில் மனமுடைந்ததாக கூறப்படும் பிரசன்னா, அவரின் தாய் கிருஷ்ணகுமாரி, மனைவி அஸ்வினி, 8 வயது மகள் ஆகியோர், வீடியோவில் வாக்குமூலம் பதிவு செய்து விட்டு நேற்று விஷம் குடித்தனர். இதையடுத்து அருகே இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதில் அவரது தாய் கிருஷ்ணகுமாரி உயிரிழந்தார். சிறுமி, பிரசன்னா, அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து கோவை செல்வபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web