எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! முதன் முறையாக ரவியுடன் இணைகிறார் கீர்த்தி சுரேஷ்!!

 
கீர்த்தி சுரேஷ்

நடிகர் ஜெயம்ரவி முதன் முறையாக நடிகை கீர்த்தி சுரேசுடன் சேர்ந்து நடிக்க உள்ளார். சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் ‘சைரன்’ படப்பிடிப்பு தற்போது சூடுபிடித்துள்ளது படக்குழுவினரை குஷியாக்கி உள்ளது.தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஹீரோவா வலம் வருபவர் ஜெயம்ரவி. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களத்தை தேர்வு செய்து நடித்துவரும் இவர் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவரது ரசிகர்கள் பட்டாளம் ஜெயம் ரவியின் அடுத்த படம் என்ன என்பதில் ஆர்வமாக இருந்தனர்.

கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில், ‘சைரன்’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ ஆகிய படங்களில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் இயக்குனராக களம் இறங்கியுள்ளார்.அன்பு, காதல், பாசம் உள்ளிட்ட குடும்ப சென்டிமெண்டை மையமாகக் கொண்டு ‘சைரன்’ திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்து அளிக்க உள்ளது. இத்திரைப்படத்தில் முதல் முறையாக ஜெயம்ரவியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அனுபமா பரமேஸ்வரனும் திரைப்படத்தில் கலக்க உள்ளார்.  கதைக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் யோகி பாபுவும், சமுத்திரக்கனியும் தோன்றுகிறார்கள். சைரன் திரைப்பட தயாராரிப்பாளரான சுஜாதா விஜயகுமார் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் மிகவும் அக்கறை காட்டி வருகிறார்.ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ் ஜோடி ‘சைரன்’ திரைப்படத்தில் முதல்முறையாக ஜோடி சேர உள்ளதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web