புடவை, கூலிங்கிளாசில் கால்பந்து ஆடிய பெண் எம்பி!!
முன்பெல்லாம் இது ஆண்கள் விளையாட்டு , இது மட்டுமே பெண்கள் விளையாடும் விளையாட்டு என சில கட்டுப்பாடுகள் இருந்தன. தற்போது எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. கிரிக்கெட் தொடங்கி அனைத்து விளையாட்டுக்களிலும் பெண்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
Fun moments from the final of the Krishnanagar MP Cup Tournament 2022.
— Mahua Moitra (@MahuaMoitra) September 19, 2022
And yes, I play in a saree. pic.twitter.com/BPHlb275WK
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமையிலான மம்தா பானர்ஜியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பெண் எம்.பி.யாக இருப்பவர் மஹ¨வா மொய்த்ரா. இந்நிலையில் கிருஷ்ணாநகர் எம்.பி. கோப்பை கால்பந்து போட்டியில் பெண் எம்.பி.மஹ¨வா மொய்த்ரா சேலை அணிந்தபடி பங்கேற்று பார்வையாளர்களை அசர வைத்துவிட்டார். சிவப்பு& ஆரஞ்சு நிற புடவை அணிந்திருந்து மிகவும் எளிமையாக காட்சி தந்த மஹ¨வா, காலணிகளை அணிந்து கொண்டும், கண்ணில் கூலரும் அணிந்திருந்தார். திடீரென்று ஆடுகளத்தில் நுழைந்த அவர், பந்தை அசாலாட்டாக கோல் அடித்து விளையாடி பார்வையாளர்களை கவர்ந்தார்.
விளையாட்டிற்கு என பிரத்யேகமாக உடை அணிந்த வீரர்களே சில சமயங்களில் தடுமாறும் போது, சேலை அணிந்த வீரமங்கையாக கால்பந்து அரங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்த பெண் எம்.பி.மஹ¨வா மொய்த்ராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இது குறித்த புகைப்படங்களை அவர் தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘‘வேடிக்கையான தருணங்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பெண் எம்.பி. மஹ¨வா மொய்த்ரா கால்பந்து போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் மேற்குவங்க தேசம் முழுவதும் கால்பந்து போட்டிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போதைய போட்டிகளிலும் மஹ¨வா கால்பந்து விளையாடி அசத்தினார். எனவே இது முதல்முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!