மிதக்கும் சென்னை!! எச்சரிக்கையா இருங்க மக்களே!! அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு!!

 
மிதக்கும் சென்னை

தமிழகத்தில்  வட கிழக்கு பருவ மழை அக்டோபர் 29 முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இத்துடன் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நவம்பர் 14ம் தேதி வரை இந்த மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

தொடர் கனமழை காரணமாக 28 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நேற்று நள்ளிரவில் தொடங்கிய மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பத் தொடங்கியுள்ளன. முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருநகர் சென்னை கார்பரேஷன் மக்களுக்கு அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.சாலைகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்ற மழை நீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளம்

ஒரு வேளை அவை திட கழிவுகளால் அடைக்கப்பட்டு தண்ணீர் தேங்கும் நிலை உருவாகலாம். சென்னை முழுவதும் ஆங்காங்கே மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு மழை நீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், கனமழையில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக  அவரச கால உதவி தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அவசரகால தொலைபேசி எண்கள் 044-25619206, 044- 25619207, 044-25619208  . இந்த எண்களில் தொடர்பு கொண்டு தொலைபேசி மூலம் தெரிவிக்கலாம். மேலும் 9445477205 என்ற எண்ணில் வாட்ஸ் அப்  மூலமும்  தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web